குறுந்தொகை 93

                                              93.தலைவி கூற்று.

திணை : மருதம்

கூற்று :  தலைவி கூற்று 

                             நல்நலம் தொலைய நலம்மிகச் சாஅய்

                             இன்உயிர் கழியினும் உரையல் அவர் நமக்கு 

                             அன்னையும் அத்தனும் அல்லரோ தோழி

                             புலவியஃது எவனோ அன்பிலங் கடையே.

                                                                                     - அள்ளூர் நன்முல்லையார்.

தெளிவுரை:

                     தோழி! நம்முடைய நல்ல பெண்மை நலம் கெடவும் உடலழகு மிகவும் மெலிந்து போகவும் எல்லாவற்றினும் இனிய நம் உயிர் நீங்குமாயினும் அவர்மாட்டுப் பரிவுரை பகராதே. அத்தலைவர் நமக்குத் தாயும் தந்தையும் அல்லரோ? அன்பு என்பது இல்லாவிடத்துப் புலவி உண்டாவது எதன் பொருட்டு ?

Comments

Popular posts from this blog

நற்றிணை 91

குறுந்தொகை 91

குறுந்தொகை 94