குறுந்தொகை 91
91.தோழி கூற்று
திணை ; மருதம் .
கூற்று ; தலைவி கூற்று.
அரில்பவர்ப் பிரம்பின் வரிப்புற விளைகனி
குண்டுநீர் இலஞ்சிக் கெண்டை கதூஉம்
தண்துரை ஊரன் பெண்டினை ஆயின்
பலஆ குகநின் நெஞ்சில் படரே
ஓவாது ஈயும் மாரி வண்கைக்
கடும்பகட்டு யானை நெடுந்தேர் அஞ்சி
கொன்முனை இரவுஊர் போலச்
சிலஆ குகநீ துஞ்சும் நாளே.
- ஔவையார்.
தெளிவுரை;
நெஞ்சே! ஒன்றோடொன்று பின்னிக்கொண்டு வளர்கின்ற பிரப்பங் கொடியின் புறத்தே வரிகளைக் கொண்ட கனிந்த பழத்தை ஆழமான நீரையுடைய குளத்தில் உள்ள கெண்டைகள் கவ்வுதற்கு இடமாகிய தண்ணிய நீர்த்துறைகளையுடைய தலைவனுக்குரிய மனைவியாக நீ இருப்பாயாயின் , நின் உள்ளத்தில் துன்பம் பலவாகுக. எப்பொழுதும் ஒழியாது கொடுக்கும் கைவண்மையுடைய கையினையும் விரைந்த செலவினையுமுடைய யானைப்படையினையும் தேர்ப்படையினையும் கொண்டுள்ள அதியமான் அஞ்சியினது அச்சத்தைச் செய்யும் இரவினையுடைய ஊரில் உள்ளாரைப்போல நீ தூங்கும் நாள் சிலவாகுக.
Comments
Post a Comment