குறுந்தொகை 94

                                             94.தலைவி கூற்று.

திணை: முல்லை 

கூற்று : தலைவி கூற்று 

                பெருந்தண் மாரிப் பேதைப் பித்திகத்து

                அரும்பே முன்னும் மிகச்சிவந் தனவே

                யானே மருள்வென் தோழி பானாள் 

                இன்னும் தமியர் கேட்பின் பெயர்த்தும்

                என்ஆ குவர்கொல் பிரிந்திசி னோரே

                அருவி மாமலைத் தத்தக்

                கருவி மாமழைச் சிலைதரும் குரலே.

                                                                             - கதக்கண்ணன் 

தெளிவுரை:

                      தோழி! பெரிய குளிர்ச்சியையுடைய மழைக்காலத்துக்கு உரிய அறிவின்மையையுடைய பிச்சியின் அரும்கள் மாரிக் காலத்திற்கு முன்பேயே மிகுதியும் சிவந்து காணப்படுகின்றன . அதனைக் கண்டு யானே கார்ப்பருவம் கண்டு மயங்குவேன் ? மயங்கேன். ஆயினும் பிரிந்து என்பால் இப்பொழுதும் மீண்டு வாராது தனித்திருப்பவராகிய தலைவர் , அருவியானது பெரிய மலையிலே தத்தி விழும்படி தொகுதியாகிய பெரிய மேகங்கள் முழங்கும் ஓசையை நடு இரவில் கேட்பாராயின் , பிரிவுத் துயரால் மேலும் என்ன நிலையினை எய்துவரோ ? 

Comments

Popular posts from this blog

நற்றிணை 91

குறுந்தொகை 91